நாம் பேசத்தொடங்கிய போது
சில வருடங்களின் மௌனம்
ஒரு சவர்க்கார பலூன் போல
சட்டென உடைந்தது.
நமது
இறுதி சொல்லையும்
இறுதி பாவனையையும்
தேடிக்கொண்டு
இறுதியாய் சண்டையிட்ட
இடம் நோக்கி சென்றோம்.
அங்கு சிதறிகிடந்த
நமது
மௌன காலங்களின்
காலண்டர் காகிதங்களை
நீ உணர்ச்சியற்று பொருக்கினாய்.
ஒரு குளி தோண்டி
அதை நட்டு வைத்தாய்
அதில் வரப்போகும்
கால மரத்தில்
ஒரு ஊஞ்சல் கட்டித்தர சொன்னாய்
1 comment:
அழகான கவிதை!
Post a Comment